புதன், 12 மார்ச், 2008

வருவாயா தோழி?


உறவுகளைத் தேடினேன்.... என்
உயிராய் நீ வந்தாய் !!

நெருக்கமாய் திரிந்ததில்லை - ஆனால்
நெஞ்சமெல்லாம் நீ நிறைந்தாய் !

சொந்தங்கள் பல தந்தவள் நீ !
சொர்க்கத்தை காட்டியவளும் நீ !

வெளிச்சத்தில் நான் வாழ
விளக்காய் இருந்தவளே !

விடியும் வேளையில் - இந்த
விலகல் ஏனடி?

வேதனை தந்த பின்
வேஷங்கள் எதற்காக?

உலகிற்காய் நடிக்கிறோமா? - என்
உள்ளத்தில் பல வினாக்கள் !!

குழப்பங்கள் என் மனதில் - அதை
கொட்டி விட நினைக்கிறேனடி.

ஆசைகள் நிராசைகளான
ஆயிரம் சமாதிகள் என் மனதில் !

பிரியாத உறவென நினைத்த - நம் நட்பு
புரியாத உறவாய் தொடருதடி !

இணையாத பிரியாத தண்டவாளமாய் - நம்
இதயங்கள் பயணிக்குதடி !!

விதி இதுதான் என்றெண்ணி
விலகி விட முடியவில்லை...

மதியால் வென்று உனை சேர
மார்க்கமேதும் தெரியவில்லை...

தவிக்கிறேனடி - என் உயிர் தோழி
தப்பிக்க வைக்க வருவாயா ?

கருத்துகள் இல்லை: