நெருக்கமாய் திரிந்ததில்லை - ஆனால்
நெஞ்சமெல்லாம் நீ நிறைந்தாய் !
சொந்தங்கள் பல தந்தவள் நீ !
சொர்க்கத்தை காட்டியவளும் நீ !
வெளிச்சத்தில் நான் வாழ
விளக்காய் இருந்தவளே !
விடியும் வேளையில் - இந்த
விலகல் ஏனடி?
வேதனை தந்த பின்
வேஷங்கள் எதற்காக?
உலகிற்காய் நடிக்கிறோமா? - என்
உள்ளத்தில் பல வினாக்கள் !!
குழப்பங்கள் என் மனதில் - அதை
கொட்டி விட நினைக்கிறேனடி.
ஆசைகள் நிராசைகளான
ஆயிரம் சமாதிகள் என் மனதில் !
பிரியாத உறவென நினைத்த - நம் நட்பு
புரியாத உறவாய் தொடருதடி !
இணையாத பிரியாத தண்டவாளமாய் - நம்
இதயங்கள் பயணிக்குதடி !!
விதி இதுதான் என்றெண்ணி
விலகி விட முடியவில்லை...
மதியால் வென்று உனை சேர
மார்க்கமேதும் தெரியவில்லை...
தவிக்கிறேனடி - என் உயிர் தோழி
தப்பிக்க வைக்க வருவாயா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக