விதி தந்தது
வெள்ளைப் புடவை - இனி
வெளிச்சம் கிடையாது!
சகுனம் சரியில்லை - நல்ல
சந்தர்ப்பங்களில் வந்தால் !
நீ மட்டும்
நித்தமும் வெள்ளையுடன்
சபை நடுவே வருகிறாயே !
விலக்கப்பட்டவள் நான் !
விக்கிரகம் நீ !
அருள் பாலிக்க நீ!
அறையுள் நான் !
என்னம்மா நியாயம் இது
என் சரஸ்வதி தாயே!
என் சரஸ்வதி தாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக