பெண்ணே!
எத்தனை காலம்
இருளில் வாழ்வாய்?
துக்கம் கொண்டு
தூங்கியது போதும்!
விழித்துக் கொள்!
விடியலை தேடு!
தீயைக் கூட
தீர்த்துக் கட்டும் - நீரின்
தண்மையே இயல்பான
மென்மை நீ பெண்ணே!
கத்தி வேண்டாம்!
கண்ணீரும் வேண்டாம்!
மனிதனை மதித்து - அதை
மறந்தவனை மிதித்து
எதிர்காலத்தை - நீ
எதிர் கொள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக