திங்கள், 10 மார்ச், 2008

எதிர் கொள் - பெண்ணே




பெண்ணே!

எத்தனை காலம்

இருளில் வாழ்வாய்?

துக்கம் கொண்டு

தூங்கியது போதும்!

விழித்துக் கொள்!

விடியலை தேடு!

தீயைக் கூட

தீர்த்துக் கட்டும் - நீரின்

தண்மையே இயல்பான

மென்மை நீ பெண்ணே!

கத்தி வேண்டாம்!

கண்ணீரும் வேண்டாம்!

மனிதனை மதித்து - அதை

மறந்தவனை மிதித்து

எதிர்காலத்தை - நீ

எதிர் கொள்!








கருத்துகள் இல்லை: