திங்கள், 10 மார்ச், 2008

அன்புத் தோழியே!


இதயம் துடிக்கும் வரை மறவாது

அந்த

இனிமையான பொழுதுகள்

பாலைவனமாய் விரிகின்ற நினைவில் - தெரியுது

பசுமையான அந்தக் காலங்கள்

அரை நொடியில் முடிந்த கனவாய்

அத்தனையும் மறைந்த பின்னும்

மனத்திரையில் எட்டிப் பார்க்கும் - அவை

மகிழ்வான சுவடுகளே!


கடைசி வரை மறவாது - அந்த

கல்லூரி ஞாபங்கள்.


ஆனால்......

கசக்குதடி அனைத்தும் - நீதான்

கண்ணீரை தந்துவிட்டாயே!



பிரிவொன்று நேர்ந்தாலும் - நாம்

பிணைந்திருப்போம் இதயத்தால்

நேற்று வரை கனவு கண்டேன். - நீதான்

காற்றாய் மறைந்து விட்டாயே!


புரியாத புதிர் நீயடி!!!

கருத்துகள் இல்லை: