இதயம் துடிக்கும் வரை மறவாது
அந்த
இனிமையான பொழுதுகள்
பாலைவனமாய் விரிகின்ற நினைவில் - தெரியுது
பசுமையான அந்தக் காலங்கள்
அரை நொடியில் முடிந்த கனவாய்
அத்தனையும் மறைந்த பின்னும்
மனத்திரையில் எட்டிப் பார்க்கும் - அவை
மகிழ்வான சுவடுகளே!
கடைசி வரை மறவாது - அந்த
கல்லூரி ஞாபங்கள்.
ஆனால்......
கசக்குதடி அனைத்தும் - நீதான்
கண்ணீரை தந்துவிட்டாயே!
பிரிவொன்று நேர்ந்தாலும் - நாம்
பிணைந்திருப்போம் இதயத்தால்
நேற்று வரை கனவு கண்டேன். - நீதான்
காற்றாய் மறைந்து விட்டாயே!
புரியாத புதிர் நீயடி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக