புதன், 14 ஏப்ரல், 2010

பிச்சைகாரர் இல்லாத பூமி வேண்டும்!!


tho;ifr; nryTfs; mjpfupj;j epiyapy; mtw;Wf;F Kfk; nfhLf;f Kbahj epiyapy; jpz;lhb tapw;iwf; fOTtjw;fhf gpr;irnaLg;gtu;fspy; xU gFjpapdupd; gpiog;gpYk; fle;j Kjyhk; jpfjp kz; tpOe;js;sJ. ahrfk; Nfl;L gpiog;G elj;Jk; ,tu;fSf;F Ngupbahd mwptpg;nghd;iw ,yq;if Gifapujj; jpizf;fsk; mz;ikapy; ntspapl;bUe;jJ. mjd;gb fle;j Vg;uy; 1Mk; jpfjp Kjy; mtu;fs; ,uapypy; gpr;ir Nfl;f KbahJ. mjidj; njhlu;e;J jdpahu; g]; cupikahsu; rq;fKk;> ntFtpiutpy; jdpahu; g];fspy; gpr;irnaLf;f jil tpjpf;fTs;sjhf mwptpg;nghd;iw ntspapl;bUe;jJ.

,e;j mwptpg;G mNefkhNdhUf;F ngUk; epk;kjpia Vw;gLj;Jk;. Vnddpy; ,t;thwhd ,uapy; kw;Wk; g];fspy; ahrfk; Nfl;L tUgtu;fshy; ghjpf;fg;gl;ltu;fs; mNefu;. g]; jupg;gplj;jpy; ,Ue;J fpsk;Gtjw;F Kd;dNu 2 3 Ngu; ahrfk; Nfl;L g];fspy; Vwp ,wq;Ftu;. ,tu;fshy; gazpfs; rq;flkhd epiyia vjpu;nfhs;s Ntz;b Vw;gLfpwJ. me;j ahrfu;fs; midtUf;Fk; gzq; nfhLf;f Kbahj NghjpYk; mtu;fisj; jtpu;f;f Kbahj ju;krq;flkhd epiyAk; Vw;gLfpwJ. NtW nghJ ,lq;fspy; ahrfk; Nfl;Nghiu tpl;L rw;W tpyfpr; nry;y KbAk;. Mdhy; g]; kw;Wk; ,uapy;fspy; mku;e;jpUf;Fk; Mrdj;jpd; mUfpy; te;J ahrfk; Nfl;Fk; NghJ vq;F tpyfpr; nry;tJ? ,g;gb ju;krq;flkhd epiyapypUe;jtu;fis ghJfhf;Fk; tifapyhd ,e;j mwptpg;G epk;kjp mspg;gJjhNd?

mJ jtpuTk; ,t;thwhd ahrfu;fshy; Vw;gLk; NtWk; gy ghjpg;Gfspy; ,Ue;J ghJfhg;igg; ngwTk; ,e;eltbf;iffs; cjtpahftpUf;Fk;. gpl;nghf;fl; vdg;gLk; nfhs;isr; rk;gtq;fs;> gzq; nfhLf;fhj gazpfs; mr;RWj;jg;gLjy; Nghd;w rk;gtq;fs; jtpu;f;fg;gLk;. mj;Jld; ,q;F tWikahy; ahrfk; Nfl;L tUgtu;fs; kl;Lkd;wp jkJ Rayhgq;fSf;fhf nfsutg;gpr;ir vLg;gtu;fspd; njhy;iyAk; ngUk; gpur;ridahfNt ,Uf;fpwJ. nghJthf ,e;j nfsutg;gpr;ir gbj;j r%fj;jhNyNa Nkw;nfhs;sg;gLtJ Ntjidf;FupaJ. ,tu;fs; jkJ nghOJNghf;FfSf;fhf ,t;thW fyf;\d; vd;w ngaupy; gzk; jpul;bdhYk; ,JTk; xUtifahd gpr;irjhNd!

,t;thW gy;NtW tifapy; gazpfisg; ghJfhf;f ,e;jj; jpl;lq;fs; cjtpdhYk; ,J> cz;ikapy; ghjpf;fg;gl;l epiyapy; xU ftsk; czTf;fhf ahrfk; Nfl;Nghiu ghjpf;fj;jhd; NghfpwJ. cly; mq;ftPdKw;w epiyapy;> ciof;f topapd;wp ,Ug;gtu;fisNa ,e;eilKiwfs; ghjpf;f Nghfpd;wJ. nghJ ,lq;fis jtpu;j;j Msuttkw;w ,lq;fspy;jhd ahrfk; ngw KbAkh? ,e;epiyapy; g];> ,uapy;fspYk; gpr;irnaLf;f jiltpjpj;jhy;. ,tu;fspd; mLj;j Ntis czTk; tho;Tk; Nfs;tpf;FupajhfptpLky;yth? nghJkf;fis ghJfhf;Fk; tifapyhd jpl;lq;fs; vd;w Nghu;itapy; mk;kf;fspy; xU gFjpapduhf tWikapy; thLk; ahrfu;fspd; gpiog;gpy; kz;izas;spg; NghLtJ ve;j tifapy; epahak;?

vdNt ,t;thwhd jpl;lq;fis Kd;itj;J gazpfisg; ghJfhf;Fk; mNj Ntis tWikahy; thLk; ahrfu;fis ghJfhf;Fk; jpl;lq;fSk; Kd;itf;fg;gl Ntz;Lk;. gpr;irnaLg;gij jil nra;Ak; mNjNtis mtu;fs; njhlu;ghd khw;W eltbf;iffisAk; Nkw;nfhs;tjd; %yk; gazpfisAk; ghJfhf;fyhk;…… cz;ikahf ghjpf;fg;gl;ltu;fisAk; ghJfhf;fyhk;…… nfsutg;gpr;irf;fhuu;fs; kw;Wk; jz;ly;fhu;fSf;F vjpuhf eltbf;ifnaLf;fyhk;. cjhuzkhf gpr;irnaLg;gtu;fs; cz;ikapy; tWikahy; gpr;irnaLg;ghu;fshapd; mtu;fSf;F khw;W ciog;ig vw;gLj;jp nfhLf;f topaikj;Jf; nfhLf;fTk; mjd; gpd; njhlu;e;Jk; gpr;irnaLg;gpd; mtu;fSf;nfjpuhfr; rl;l eltbf;ifnaLf;fTk; gazpfSf;F mnrsfu;ak; mspf;Fk; tifapy; nfsutg; gpr;irnaLg;Nghu; kw;Wk; jz;ly;fhuu;fSf;nfjpuhfr; rl;l eltbf;if vLg;gjw;Fk; Vw;W tifapyhd eltbf;iffis Kd;itf;f KbAk;.

,t;thwhd jpl;lq;fs; Kiwahf epiwNtw;wg;gl;L> eilKiwg;gLj;jg;gl;L gpr;irfhuu; mw;w ciog;ghspfspd; Njrk; cUthFkhapd; mJ ek; ehl;ilNa nrhu;f;fg+kpahf;Fk; vd;gjpy; re;Njfkpy;iy.

வெள்ளி, 12 மார்ச், 2010

மாலையிடும் மங்கையரே ஒரு நிமிடம்……!

மாவிலை தோரணம்… கண் கவர் கோலம்… பூரண நிறைகுடம்… என மங்களகரமாகத்தான் நமது கலாசார நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பாடசாலை நிகழ்ச்சிகள் முதல் பொது நிகழ்வுகள் வரை அத்தனையும் இப்படித்தான் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடைபெறுகின்றன. அத்துடன் பட்டுப் புடைவைகள் சரசரக்க பன்னீர் தெளித்து வரவேற்கும் பெண்கள்… தமிழர் பண்பாட்டிற்கேற்ப விருந்தினரை வரவேற்கும் குலமகளிர்! இப்படி தமிழனின் தனித்துவம், கலாசாரம் இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. மேற்கத்தைய மோகத்தில் தமிழன் மூழ்கினாலும் இவ்வாறான நிகழ்வுகளினூடாக கலாசாரத்தை அழித்து போகவிடாமல் பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றான்.


ஆனால் இன்று இந்த நிகழ்வுகளிலெல்லாம் புதிய கலாசாரம் புகுத்தப்படுகிறது. இப்புதுமை கலாசார மீறலாகவே உள்ளது. இந்நிகழ்வுக்கு வரும் விருந்தினர்கள் மாலையிட்டு வரவேற்கப்படுகின்றனர். அதுவும் மாணவிகளாலும், பெண்களாலும் வரும் விருந்தினர்களுக்கு மாலையிடப்படுகிறது. முன்னைய காலங்களில் அதிதியாக வருபவரக்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்பார்கள்… அந்த அதிதியுடன் அவரின் பாரியார் வருவாராயின் சில சமயம் அவருக்கு பெண்கள் மாலையிட்டு வரவேற்பர். ஆனால் இன்று சில இடங்களில் வரும் அதிதிக்கே மாலையிடப்படுகிறது.

‘மாலையிடல்’ என்ற சொல் தமிழருக்கு நினைவூட்டுவது திருமணத்தைத் தானே நமது புராணங்கள் தொட்டு இன்றுவரை ஓர் பெண் ஆடவன் ஒருவனுக்கு மாலையிட்டிருப்பின் அது அவளுக்கு கணவன்தானே! சுயம்வரத்தில் மாலையிடுபவன் அவள் மணாளனே. அதுமட்டுமன்றி தாலியற்ற கந்தர்வ திருமணங்கள் கூட மாலை மாற்றலுடன் மட்டும்தானே இடம்பெற்றன. அதெல்லாம் புராணகாலம், இது நவீன யுகம் என்று சொல்லப் போகிறிர்களா?

மாலை மட்டும் மாற்றிக் கொண்டாலே திருமணம்தான் என்று அண்மையில் இந்திய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்திருந்தது. தமிழ் என்றதுமே நினைவுக்கு வரக் கூடிய சங்கத் தமிழ் வளர்த்த மதுரை உயர் நீதிமன்றம்தான் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது. மாலை மட்டும் மாற்றி விட்டு தன் இச்சைகள் தீர்ந்த பின் ‘தாலி கட்டவில்லை, இவள் மனைவியல்ல’ என்று ஒர் பெண்ணின் வாழ்வைச் சீரழிக்க முயன்ற கயவனுக்கே மதுரை உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியிருந்தது. மாலை மட்டும் மாற்றினாலும் திருமணம்தான்! என்றே முடிவு சொன்னது.

ஏனெனில் தமிழ் பெண்ணால் முதன்முறையாக ஆடவன் ஒருவனுக்கு மாலையிடப்படுவது திருமணநாளில்தான். அது ‘மாலை மாற்றல்’ எனும் நிகழ்விலேயே. இது ‘உடலாலும் உள்ளத்தாலும் இருவரும் ஒருவர்’ என்ற தத்துவத்தை உணர்த்துவது. அவ்வாறு மாலையிடுபவனே அவனது வாழ்நாள் துணைவன். அத்தகைய புனிதமாகக் கருதப்படும் மாலையை மாற்றானுக்கு இடத்தான் வேண்டுமா?

இது மேலைத்தேய கலாசாரமும் கிடையாது. நமக்கான கலாசாரமும் கிடையாது. இடை காலத்தில் சிலர் தோற்றுவித்து விடும் புதிய கலாசாரமே! இதனை மாற்றம் என்று கூறி அங்கீகரிப்பதற்கு இதனால் ஏற்படக் கூடிய நன்மையேதும் கிடையாதென்றே நினைக்கிறேன். ஆனால் மருவென கருதி தவிர்த்தால் சிறப்பாகும். ஏனெனில் இது மேலைத்தேய கலாசாரம் இல்லையென்ற நிலையில் பிறகலாசாரத்தைக் கொண்ட மக்களின் மனதினில் இதுதான் தமிழர் கலாசாரம் போலும் என்ற தவறான எண்ணக்கரு உருவாகிவிடும்.



கலாசாரம் எதற்கு? மாலையிட்டால் தவறென்ன? இதனால் கற்பா போய்விடும் என்று கேட்கக் கூடியவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். மாலையிடுவது தவறா சரியா என்பதை விட அவசியமா? அதனால் நன்மை ஏதேனும் உள்ளதா? என்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். அவசியம் கிடையாது, ஒரு மலர்க் கொத்தை வழங்கியே விருந்தினரை வரவேற்க முடியும். “மாலையிட்டால்தான் வருவேன்” என்று எந்த அதிதியும் அடம்பிடிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இதனால் நன்மையோ பயனோ ஏதும் கிடைக்க போவதாகவும் தெரியவில்லை.

எனவே, நமக்கு நன்மையோ பயனோ ஏற்படாத ஒன்றைச் செய்து கலாசாரத்தைச் சிதைக்காமல், அதையாவது வாழ விடலாமே! ஓவ்வொரு மனிதனுக்குமான தனித்துவ அடையாளம் அதுதானே!!

திங்கள், 8 மார்ச், 2010

மகளிர் தினக் கூட்டம்

“அவளெல்லாம் பொம்பிளையா? புருஷன் செத்து முழுசா ஒரு வருஷம் கூட முடியலை. கைக்குழந்தையை வைச்சுக் கொண்டு இரண்டாம் கலியாணமும் கட்டிட்டாள். இவள் எங்கட தெருவில இருக்கிறதால எங்களுக்குத் தான் அவமானம். அவளைப் போலவே நடத்தை கெட்டவர்கள் என்றுதானே எங்களையும் நினைக்க போறாங்க.” ஆழ்ந்த கவலையுடனும் சமூகப் பொறுப்புடனும் பேசிக் கொண்டிருந்தாள் பார்வதி மாமி.

சற்று முன்னர் பார்வதி மாமி ‘விதவைகள் மறுமணம்’ பற்றி பேசியபோது ஆதரித்து கைதட்டிய நண்பிகள் கூட்டம் இதையும் ஆமோதித்து தலையாட்டினர், மகளிர் தினக் கூட்டத்திற்காக பார்வதி மாமியின் கணவரான பரமசிவம் மாமா ஸ்பெஷலாக தயாரித்த கட்லெட்டை சுவைத்துக் கொண்டு. கையில் கட்லெட் இருந்ததால் கைதட்டி பாராட்ட முடியவில்லை போலும்!!

மகளிர் தினம்


fhiyapy; ,Ue;J gk;gukha;r; Rod;W fisj;Jg; Ngha; RUz;L gLj;j mtis mjl;b vOg;gp> gl;Lg; Glit fl;Ltpj;J> gsgsf;Fk; eiffs; mzptpj;J> Nff; ntl;b kidtpf;fhf kfspu; jpdj;ijf; nfhz;lhbf; nfhz;bUe;jhd; mtd;. gJikahf epd;w mtis ghu;f;f$l Neukpd;wp mtidg; ghuhl;bf; nfhz;bUe;jd cwTfs; - me;j gJikia myq;fupj;J Ml;Ltpg;gjw;fhf.

வியாழன், 4 மார்ச், 2010

தமிழ் அரச 'கறும' மொழியா?



“நங்ப்ங்ஸ்ரீற் ஹ்ர்ன்ழ் ப்ஹ்ஹஞ்ங்” தமிழர்களே இக்கூற்றிற்கு அர்த்தம் புரியவில்லையா? இதுவும் தமிழ்தான். இலங்கையின் அரசாங்க இணையத்தளமொன்றில் ‘select your language’ என்ற வசனத்திற்கான தமிழாக்கமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இதன் அர்த்தம் ‘உங்கள் மொழி
யைத் தெரிவு செய்யுங்கள்’ என்பதாகும். இந்தத் தமிழ்க் கொலைக்கு தொழில்நுட்பத் தவறு என்ற போர்வையால் பரிகாரம் செய்யப்பட்டு விடும்.


ஆனால் இதையும் மீறி ‘ல’கர, ‘ழ’கர, ‘ள’கர பேதங்கள், ‘ற’‘ர’, ‘ந’‘ன’‘ண’ பேதங்கள் புரியாது வேறு அர்த்தப்படுத்தலுக்கான சொற்களை தமிழில் திணித்து ஜோராக தமிழ்க் கொலை நடைபெறும். சில நிறுவனங்களில் ‘தமிழ்க் கொலை’ நடைபெறாது, ஒரேயடியாக அதை ஒழித்துக் கட்டியிருப்பார்கள். இப்படி நாளாந்தம், இடத்துக்கிடம் தமிழ்மொழிக்கு சோதனை மேல் சோதனையே.

எமது இலங்கைச் சனநாயகக் குடியரசின் அரசியலமைப்பின்படி சிங்களத்துடன் தமிழும் அரசகரும மொழி. அ
த்துடன் தேசிய மொழியும் கூட. இதனடிப்படையில் இந்த நாட்டில் எந்தவொரு அரச நிர்வாக அலுவல்களையும் இவ்விரு மொழிகளில் ஒன்றின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அத்தோடு அந்த நிர்வாகங்களுக்கு வழங்க வேண்டிய அல்லது அங்கிருந்து பெற வேண்டிய ஆவணங்களை இவ்விரு தேசிய மொழிகளில் விரும்பிய அல்லது அறிந்த மொழியில் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் நடைமுறையில் அவற்றின் சாத்தியப்பாடு கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இந்நாட்டின் யாப்பின்படி இணைப்பு மொழியாகவுள்ள ஆங்கிலம் பயன்படுத்தப்படும் அளவிற்குக் கூட தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ் பயன்படுத்தப்படுவதில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து விடயங்கள் தொடர்பான ஆவ
ணங்களும் சிங்கள மொழியில் இருக்க வேண்டும் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு தேவை என்ற நிலையே காணப்படுகிறது.

இந்த அரசகரும மொழிக் கொள்கை சட்டத்திலுள்ள போதிலும் நடைமுறையில் சாத்தியப்படாமைக்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் அரச சேவையில் உள்ளவர்களில் சுமார் 9 சதவீதமானவர்களே தமிழ் மொழி பேசுவோர். இக்குறுகிய தொகையைக் கொண்டு அரசகரும மொழிக் கொள்கையை அமுலாக்க முடியாது. இதைவிடவும் இரண்டாம் மொழியறிவுடையோர், மொழிபெயர்ப்பாளர்கள் போன்றோரின் தொகையும் மிகக் குறைவாகவே உள்ளது. இதைக் கொண்டு மொழிக் கொள்கையைப் பிரகடனப்படுத்தி தமிழ் மொழிக்கு இடமளிப்பது சிரமமே.

இந்தப் பிரச்சனைகளை, சிக்கல்களை குறைக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை அரசகரும மொழிகள் ஆணைக்குழு மேற்கொண்டவறே உள்ளது. பயிற்சிப்பட்டறைகள், பயிற்சி வகுப்புக்கள் எனப் பல்வேறு திட்டங்களை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டது.

இதன்போது, ‘பொலிஸாருக்கான உரையாடல்கள்’, ‘பேச்சுத் தமிழில் 40 மணித்தியால அடிப்படைப் பயிற்சி’, ‘மொழி வளத் தே
வைகளின் கணிப்பீடு’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நூல்களும், நூல் வெளியீட்டுக்கான நோக்கமும் மிக உன்னதமானவை. ஒரு சாதாரண குடிமகனின் தேவையை ஒரு அரச அலுவலகர், அக்குடிமகனின் சொந்த மொழியிலேயே கேட்டறிந்து துல்லியமான தீர்வை வழங்கலாம். அந்த வகையில் ‘பொலிஸாருக்கான உரையாடல்கள்’ எனும் நூல் 3 மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது. எல்லைப்பிணக்கு, கொலை, தாக்குதல், மிரட்டல், கற்பழிப்பு, வாகன விபத்து, மோசடி என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டவரின் சுயமொழியில் விசாரணையை மேற்கொள்ளலாமென்பதைக் கற்றுத் தருகின்றது. அதேபோன்றே, ‘பேச்சுத் தமிழில் 40 மணித்தியால அடிப்படைப் பயிற்சி’ நூலும் ஒவ்வொரு பொது நிறுவனங்களிலும் தமிழில் பேசுவதற்கான அடிப்படை வழிகாட்டியாய் அமைந்துள்ளது.

இன்றைய சூழ்நிலையில் இவ்வாறான முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியன. மூன்று தசாப்த கால யுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அந்த யுத்தத்திற்கு மொழிப் பிரச்சனையும் ஒரு காரணமென்ற வகையில், இத்தருணத்தில் அதற்குத் தீர்வு காண வேண்டியது மிக அவசியமானது.

இத்தீர்வை வழங்கும் வகையில் மொழிக் கொள்கை அமுலாக்கலுக்காகப் பாடுபடும் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் நிகழ்வுகள் அனேகமாக இணைப்பு மொழியிலேயே நடத்தப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் பல பொது நிகழ்வுகள் சிங்களம் அல்லது ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும். ஆங்கில
மொழி மூலமாக இடம்பெறும் நிகழ்வுகளுக்கு அநேகமாக சிங்கள மொழிபெயர்ப்பு வழங்கப்படும். இறுதிக் கட்ட விவாத அல்லது கலந்துரையாடலின் போது மட்டும் மூன்று மொழிகளுக்கும் இடமளிக்கப்படும். ஆனால் அரசகரும மொழி ஆணைக்குழுவின் அநேக நிகழ்வுகளில் தேசிய மொழியை விட இணைப்பு மொழியே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்பதை உரியவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

இதை ஒருபுறத்தில் விட்டுவிட்டு மொழி அமுலாக்கல் கொள்கை முயற்சியின் இன்னொரு படிக்கல்லான அரசகரும மொழிகள் கொள்கைச் செயற்படுத்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல.07ஃ2007 இனைப் பார்க்கலாம் இதன்படி
, 2007-07-01ஆம் திகதி முதல் அரசாங்க சேவை அல்லது மாகாண சேவையில் சேர்த்துக் கொள்ளப்படும் உத்தியோகத்தர்கள் அனைவரும் சேவையில் சேரும் அரச கரும மொழிக்கு மேலதிகமாக மற்றைய அரசகரும மொழியில், சேவையில் சேர்ந்;து 5 வருடங்களுள் தேர்ச்சி பெற வேண்டும். இச்சுற்றறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படின் அரசநிறுவனங்களில் தமது தேவைகளை நிறைவேற்றச் செல்லும் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் தமிழ்க் கொலைகளுக்கும் ஓரளவுக்கு விடிவு கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.

இவ்வாறான சில தீர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் அதேவேளை நாமும் நம்மாலான சில முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். நம்முள் சிலரிடம் “நாம் ஏன் சிங்களம் கற்க வேண்டும்? எனது தாய்மொழியையே நான் பேசுவேன்.” என்ற தவறான எண்ணம் உள்ளது. இந்த எண்ணக்கரு களையப்பட வேண்டிய ஒன்று. இரண்டாம் மொழிக் கல்வி என்பது அனைவருக்குமே அவசியமானதென்பதை நாம் உணர வேண்டும். எம்மிடையே பூரணமான இரண்டாம் மொழியறிவு இருந்தால் மட்டுமே எமது தாய்மொழியை நம்மால் வளர்க்க முடியும்.

புதன், 24 பிப்ரவரி, 2010

பணம் உழைக்க பலே வழிகள் சில......



அமெரிக்க நிதி நெருக்கடியை தீர்க்க ஒபாமா சிந்தித்தது போல, நம்மவர்களின் நிதிப் பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி என ஆழ்ந்து சிந்தித்ததன் பயனாக கிடைத்த அருமையான சில ஆலோசனைகள்....

01 - ஒரு A4 பேப்பரில் 10 பெயர்களை எழுதிக் கொள்ளுங்கள். அவற்றின் எதிரே 500, 700, 1000, 800, 500, 450 என சில பெறுமானங்களை குறித்துக் கொள்ளுங்கள். அந்த தாளின் மேல் பகுதியில் ஒரு பாடசாலையினதோ கோயிலினதோ பெயரை எழுதி அதற்கான கட்டட நிதி அல்லது அன்னதான நிதி என எழுதி அவற்றை file ஒன்றினுள் போட்டுக் கொள்ளுங்கள். இனி வீடு வீடாகச் சென்று அதனைக் காட்டி பணம் வசூலிக்கலாம்.

பல இடங்களில் பணத்துக்கு பதிலாக அவமானங்கள் கிடைக்கலாம். பெரிய இலட்சியத்தை அடையும் பாதையில் இவையெல்லாம் சகஜம் என்பதை உணர்ந்து பெரிய மனதுடன் மறந்து விடுங்கள்.

02- வீட்டு வாசலில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச வகுப்புக்கள் என்று எழுதி அதன் கீழ் சின்ன எழுத்தில் உங்கள் பெயரையும், பெயருக்கு பின்னால் பெரிய எழுத்தில் 2 ஆங்கில எழுத்தையும் எழுதி வையுங்கள் (-
ம் - BA, BSc, Bcom). படிக்க வருபவர்களிடம் registation fees, admission fees, maintaining fees, tute fees, exam fees.... என புதிது புதிதாக கண்டு பிடித்து வாங்கலாம். வகுப்புக்கள் இலவசம்! வருமானம் அதிகம்.

பணத் தேவை ஏற்பாடு போதெல்லாம் exam வைக்கலாம் அல்லது
ரு tuteஎழுதிக் கொடுக்கலாம்.

03 - பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தால் உங்களுக்கு வசதி மிகவும் அதிகம். பாடசாலை நேரத்தில் நன்கு தூங்கி விட்டு, சந்தேகங்களை வீட்டில் வந்து கேட்குமாறு மாணவர்களிடம் சொல்லி டியூஷன் வகுப்பு தொடங்கலாம். உங்களிடம் படிக்க வரும் பிள்ளைகளுக்கு புள்ளிகள் அதிகம் வழங்குதல், பரீட்சை வினாத்தாளில் வரப் போகும் வினாக்களை முதலே அறிவித்தல் போன்ற சின்ன சின்ன சலுகைகளை வழங்குவதன் மூலம் பிரபலமாகி வருமானத்தை பெருக்கலாம்.

04 - கொஞ்சம் மருத்துவம் தெரிந்திருந்தால், சற்று பின்தங்கிய கிராம
ப்புறம் ஒன்றிற்கு சென்று ஒரு கிளினிக் ஆரம்பியுங்கள். தலைவலி என்று வரும் நோயாளிகளிடம் கூட A - Z என்ற 26 எழுத்துக்களில் ஒரு பத்தையோ பதினொன்றையோ சேர்த்து ஒரு சொல்லை உருவாக்கி அந்த நோய் வந்துள்ளதாகச் சொல்லுங்கள். பின் 10 விட்டமின் மாத்திரைகளின் பெயர்களை எழுதிக் கொடுத்து விட்டு fees வாங்கலாம். மருந்துக் கடைக்காரனுக்கு உதவி செய்த புண்ணியம் கிடைக்கும்.

05- பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலையும் மாலையும் கோயில் வாசல்களிலும், மதியம் பள்ளிவாசல் முன்பாகவும், ஞாயிற்றுக்கிழமை காலையில் தேவாலய (சேர்ச்) வாசலிலும் போய் இரு துண்டு துணிகளை விரித்து விட்டு ஒன்றில் படுத்து தூங்குங்கள். பின் கண்விழித்து பார்க்
கும் போது நீங்கள் விரித்த மற்ற துண்டு துணியில் பணம் கொட்டிக் கிடக்கும்.

ஆனால் நீங்கள் தூங்கும் போது அதை யாரும் தூக்கிக் கொண்டு போகாமல் இருக்க கொஞ்சம் அவதானமாக அரைத் தூக்கம் தூங்குவது நல்லது.

06- எங்காவது சென்று கொஞ்சம் மலிவு விலையில் ஒரு தொகை book markerகளையோ அல்லது stickerகளையோ வாங்கிக் கொள்ளுங்கள். அதை எடுத்து கொண்டு கடற்கரை, பூங்கா போன்ற காதலர்கள் செறிந்திருக்கும் இடத்திற்கு சென்று அவற்றை விலையை பல மடங்கு அதிகமாக சொல்லுங்கள். சிவபூஜையில் கரடியான உங்களை விரட்டும் நோக்கிலேயே பலர் நீங்கள் சொல்லும் விலைக்கே வாங்கிக் கொள்வார்கள்.


இங்கு சில வேளை மட்டுமே அவமானங்கள் ஏற்படும். மறந்திடாதீங்க! நமக்கு கொள்கையே முக்கியம். "காகம் திட்டி மாடு சாகாது!" என்று உங்களை நீங்களே ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள்.

07- கொஞ்சம் அழகுக் குறிப்புக்களை படித்து தெரிந்து கொண்ட பின்னர் சில அழகு சாதன உபகரணங்கள், பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு அழகு நிலையம் ஆரம்பிக்கலாம்.

ஒருவருக்கு (பெண்ணென்றால் மட்டும்) தலை
முடி வெட்டுவதற்கே 600, 700 ரூபாயை cutting charge ஆகபெறலாம். ஆனால் முடியை ஒவ்வொன்றாக வெட்டி குறைந்தது 1 மணி நேரத்தையாவது ஒதுக்கி வெட்ட வேண்டும்.

08 - கடைசி வழி, இப்படி எல்லாம் கஷ்டப்படாமல் ஒரே நிமிடத்தில் பணம் ஈட்டக் கூடிய சிறப்பு வழி. ஆனால் இந்த பிரமாஸ்திரம் பெண்களுக்கு பயன்படாது என்பது வருத்ததிற்குரியது. உடனடியாக திருமணம் செய்து கொள்வதே அந்த வழி.

பணம், வீடு, நகை அனைத்தும் கிடைக்கும். அதிலும் உங்கள் தொழில், வாழும் நாடு என்பனவற்றின் அடிப்படையில் இந்த வருமானத்தின் அளவு தங்கியுள்ளது. உதாரணமாக டாக்டர், இஞ்சினியராகவோ கனடா லண்டன் பிரஜையாகவோ இருந்தால் பல லட்சம். ஆசிரியராகவோ இலங்கை பிரஜையாகவோ
இருந்தால் லட்சங்கள் சற்று குறையும்.

என்ன களத்தில் குதிக்க போறீங்களா? ஒரு நிமிடம்..... இந்த ஆலோசனைகள் மூலம் கிடைக்கும் வருமானம் எவற்றிலும்
பங்கு கோரவோ பங்கேற்கவோ மாட்டேன். கிடைப்பது எதுவானாலும் அது உங்களுக்கே.