வியாழன், 13 மார்ச், 2008
புதன், 12 மார்ச், 2008
எனக்கும் உயிருண்டு...
வருவாயா தோழி?
நெருக்கமாய் திரிந்ததில்லை - ஆனால்
நெஞ்சமெல்லாம் நீ நிறைந்தாய் !
சொந்தங்கள் பல தந்தவள் நீ !
சொர்க்கத்தை காட்டியவளும் நீ !
வெளிச்சத்தில் நான் வாழ
விளக்காய் இருந்தவளே !
விடியும் வேளையில் - இந்த
விலகல் ஏனடி?
வேதனை தந்த பின்
வேஷங்கள் எதற்காக?
உலகிற்காய் நடிக்கிறோமா? - என்
உள்ளத்தில் பல வினாக்கள் !!
குழப்பங்கள் என் மனதில் - அதை
கொட்டி விட நினைக்கிறேனடி.
ஆசைகள் நிராசைகளான
ஆயிரம் சமாதிகள் என் மனதில் !
பிரியாத உறவென நினைத்த - நம் நட்பு
புரியாத உறவாய் தொடருதடி !
இணையாத பிரியாத தண்டவாளமாய் - நம்
இதயங்கள் பயணிக்குதடி !!
விதி இதுதான் என்றெண்ணி
விலகி விட முடியவில்லை...
மதியால் வென்று உனை சேர
மார்க்கமேதும் தெரியவில்லை...
தவிக்கிறேனடி - என் உயிர் தோழி
தப்பிக்க வைக்க வருவாயா ?
என்னம்மா நியாயம் இது?
திங்கள், 10 மார்ச், 2008
அன்புத் தோழியே!
இதயம் துடிக்கும் வரை மறவாது
அந்த
இனிமையான பொழுதுகள்
பாலைவனமாய் விரிகின்ற நினைவில் - தெரியுது
பசுமையான அந்தக் காலங்கள்
அரை நொடியில் முடிந்த கனவாய்
அத்தனையும் மறைந்த பின்னும்
மனத்திரையில் எட்டிப் பார்க்கும் - அவை
மகிழ்வான சுவடுகளே!
கடைசி வரை மறவாது - அந்த
கல்லூரி ஞாபங்கள்.
ஆனால்......
கசக்குதடி அனைத்தும் - நீதான்
கண்ணீரை தந்துவிட்டாயே!
பிரிவொன்று நேர்ந்தாலும் - நாம்
பிணைந்திருப்போம் இதயத்தால்
நேற்று வரை கனவு கண்டேன். - நீதான்
காற்றாய் மறைந்து விட்டாயே!
புரியாத புதிர் நீயடி!!!
இல்லாத போது....
காதலித்துப் பார்
எதிர் கொள் - பெண்ணே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)