வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

“பூமியே என் வீடு… வானமே என் கூரை…”

நானும் கனவு காணுறன்!”


நானும் கனவு காண்றன்! எனக்கு நிறைய ஆசைகளும் இருக்கு! முதல்ல என்னோட ஓவியங்களுக்கு ஒரு காட்சியறை அமைக்கனும். ஏன்னா என்னோட திறமையை வெளிக்காட்டுறதும், எனக்கு வாழ்வாதாரமாவும் இருக்கிற இந்த ஓவியங்களை காட்சிப்படுத்தி விக்க சரியான இடமொன்றில்லை. அப்படி ஒரு இடம் கிடைச்ச பிறகு, அங்க இருந்து இன்னமும் நிறைய ஓவியங்கள் தீட்டனும். அதை வித்து பிரபல ஓவியராய் வாரதோட வாழ்க்கையிலம் நல்லதொரு நிலைக்கு வரணும். இதெல்லாம் நடக்குமா? என்று கூட தெரியலை. ஆனா எல்லாரையும் போலவே நானும் முன்னேறனும் என்று ஆசைப்படுறன்.” இப்படி ஆசைகள், இலட்சியங்கள், கனவுகள் என வாழும் நிர்மலா ஹேரத்தை ஒரு தெருவோர ஓவியர் என்று சொல்லலாம்.
இவரை எவ்வாறு சரியாக அறிமுகப்படுத்த முடியும் என்பது எனக்கு தெரியவில்லை.

நிர்மலாவை நான் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது இவரின் ஓவியகாட்சிக் கூடம் அமைந்துள்ள இடமே. வானமே கூரையாக, பூமியே தரையாக அமைந்தள்ள இவரின் கடைக்கு இவரின் கலையைப் போலவே எல்லைகள் ஏதுமில்லை. ‘விகாரமாதேவிப் பூங்கா கொழும்பின் பிரபலமான இடங்களில் ஒன்று. இதன் ஒரு பக்க வீதியோரம் முழுவதுமே வண்ண வண்ண ஓவியங்களை நான் அவ்வீதியை கடந்து செல்லும் சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். நிர்மலா போலவே பலர் அந்ந பாதையேரத்தில் ஓவியங்களுடன் காத்திருப்பதையும், ஓவியங்களை தீட்டுவதில் உலகையே மறந்திருப்பதையும் கண்டிருக்கிறேன்.

ஆனால், அந்த பாதையைக் கடக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு ஓவியத்தையும் வியப்போடு பார்ப்பதோடு, “நிதானமாய் பார்த்து ரசிக்கக் கூட நேரமில்லையே. இன்னொரு நாளைக்கு கட்டாயம் வந்து பாக்கணும்.” என்று நினைத்துக் கொண்டு போவதோடு என் வேலை முடிந்து விடும். மறுபடி அப்பாதையைக் கடக்கும் வரை அதைப் பற்றி நினைக்கவே சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. ஏறத்தாழ 2 வருடங்களுக்கு பிறகே அதை இரசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த ஓவியங்களை பார்க்கிற போது ரொம்ப திறமையான, ஓவியக்கலை பற்றி முழு ஞானம் பெற்ற ஓவியர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் போலவே இருக்கும். “இதுக்கெல்லாம் பெரிய பெரிய ஓவியர்களிட்ட பயிற்சி எடுத்திருப்பாங்க” என்றெல்லாம் நினைச்சிருக்கன். ஆனா நிர்மலா கூட பேசின அந்தக் கொஞ்ச நேரத்தில ‘படிப்பதனால் அறிவு பெற்றோர் 1000 உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினிலுண்டு’ என்கிறதை புரிஞ்சுகிட்டன்.

முதல்ல நான் நிர்மலாகிட்ட கேட்டதுநீங்க எங்க, யார் கிட்ட இவ்வளவு அழகாக வரையக் கத்துக்கிட்டீங்க?” என்கிறது தான். அழாக வெக்கப்பட்டு சிரிச்சாங்க. பிறகு, “நான் இதுவரை ஓவியம் பத்தின அடிப்படை கூட நான் படிச்சது இல்லை. நானா கீறி பழகினது தான். உண்மையான ஆர்வம் இருந்தா எல்லாம் தானா வரும். இதுக்கெல்லாம் கூடவா படிக்கனும்?” என்று திருப்பிக் கேட்டாங்க.

சித்திரமும் கைப் பழக்கம். செந்தமிழும் நாப் பழக்கம்என்கிறது நான்கேள்விப்பட்டிருக்கன். ஆனாலும் ஒரு சின்னச் சந்தேகம்…. இவங்க பரம்பரையிலயாராவது ஓவியரா இருப்பாங்களோ? இல்லைப் பள்ளிக் கூடத்தில படிச்சிருப்பாங்களோ? அதைக் கேட்ட போது மறுபடியும் அழகாச்சிரிச்சாங்க.

நான் அதிகமாக படிக்கலை. அப்படி படிச்சிருந்தா நல்ல ஒரு இடத்தில வேலை செய்திட்டிருப்பன். எனக்குத் தெரிஞ்ச ஒரே வேலை இது தான். ஆனா இதை நான் பள்ளிக்கூடத்தில படிச்சதும் கிடையாது. என் பரம்பரையில யாரும் ஓவியம் வரைஞ்சதும் கிடையாது. முதல்ல வரையத் தொடங்கினதே நான் தான். என்னால வரையை முடியும் என்கிறதை நான் கண்டுபிடிச்சதும் அதையே என்னோட வருமாத்துக்கு வழியாக்கினதும் ஒரு வித்தியாசமான சம்பவம். இப்ப உங்க சந்தேகம் தீந்திடிச்சா?” என்று கேட்டப்ப எனக்கு வேறொரு ஆசை வந்தது.இவ்வளவு சொன்ன நிர்மலா, ஏன் அந்த வித்தியாசமான சம்பவம் என்னென்னு சொல்லல்லை? அது என்னவாயிருக்கும்? இருக்கிற கொஞ்ச மூளையைப் போட்டுக் குடைய முடியாம என் சந்தேகத்தைக் கேட்டேன்.

அது சொல்ல கூடதா இரகசியமில்ல. ‘சிலுமினஎன்கிற பத்திரிகை ஒரு ஓவியப் போட்டி வைச்சது. ஏதோ எனக்கும் கலந்துக்கணும் என்கிற ஆசை வந்திச்சு. ஓரு அழகான இயற்கைக் காட்சியை ஒரு படத்தைப் பாத்து வரைஞ்சேன். வரைஞ்சு முடிஞ்சு பார்த்தப்ப எனக்கே அதிசயமாவும் ஆச்சர்யமாவும் இருந்திச்சு. அவ்வளவு அழகாக வந்திருந்திச்சு. அப்பதான் இதை ஏன் அந்தப் போட்டிக்கு அனுப்பனும். பரிசு கிடைக்கலாம் கிடக்காமலும் போகலாம். இதை வித்தா எனக்கு கண்டிப்பா ஒரு வருமானம் கிடைக்கும் என்று தோணிச்சு. அதை வித்தப்ப எனக்கு லாபம் கிடைச்சிச்சு. எனக்கும் ஒரு வருமானம் வேணுமில்ல? அதனால இதையே என்னோட தொழிலா ஏத்துக்கிட்டன். கிழமையில ஐஞ்சு நாளும் வீட்டை இருந்து ஓவியங்கள வரைவன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில இங்க கொண்டு வந்து விப்பன். அந்த நாளில காலையில 7 மணியில இருந்து பின்னேரம் 6 மணிவரைக்கும் இங்க தான் இருப்பன். வெளிநாட்டுக்காரங்க தான் அநேகமா வாங்குவாங்க. படத்தின்ற அளவைப் பொறுத்து ஒவ்வொரு படமும் 1000 ரூபால இருந்து 6000 ரூபா வரையில விக்க முடியும். இதே கடையில வைச்சு வித்தா 10000க்கு விக்கலாம். எல்லாமே இருக்கிற இடத்துக்கு தானே மதிப்பு? ஆனா இப்ப எனக்கு பாத்து வரையனும் என்கிறதில்லை, கற்பனையிலயே வரைய முடியும்.” ஒரு நீண்ட விளக்கத்தை தந்து முடிச்சாங்க.

அப்படி இருந்து என் சந்தேகங்கள் தீந்தபாடில்ல. பொதுவா எல்லா இடத்திலயுமே பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சனைகள். ‘தென்னாலிகமல் பாணியில சொன்னா, ஒரு பெண், தனியா பஸ்ஸில போறது பிரச்சனை, வேலைக்கு போன வேலை செய்யிற இடங்களில பிரச்சனை, சில இடங்களில வீட்டுக்குள்ளேயே பிரச்சனை. அங்க, இங்க எல்லா இடத்திலயுமே பிரச்சனைகள் தான். அப்படி இருக்கும் போது நிர்மலாவோ தனியா, ஒரு கிழமையில முழுசா 2 நாள் வீதியோரத்தில இருக்கங்களே! “இதுவரைக்கு எந்தப் பிரச்சனையும் வந்ததில்லையா?” என்று ரொம்பவே ஆவலாகக் கேட்டேன். “பிரச்சனை என்று சொல்லுற அளவுக்கு எதுவுமே வந்ததில்லை. இங்க இருக்கிறவங்க எல்லாமே என் கூடப் பிறக்காத சகோதரங்கள் தான். ஏதாவது பிரச்சனை வந்த உதவிக்கு வந்திடுவாங்க. வேலை வெட்டி இல்லாம, அம்மா அப்பா சொத்த வீணாக்கிட்டு தறுதலையா திரிவாங்களே அந்த மாதிரியானங்க இதால போறப்ப வாரப்ப ஏதாவது சொல்லுவாங்க. நான் அதைக் காதில போட்டுகிறதே இல்ல.”

நிர்மலா மேல கொஞ்சம் பொறாமை வந்தது. “அப்படின்னா ரொம்ப சந்தோஷமா இருக்கிறீங்களா? உங்களுக்கு எந்தப் பிரச்சனையுமே கிடையாதா?” கேட்டப்ப, “இந்த பாதை அடிக்கடி மூடப்படும். அந்த நேரங்களில போட்டதை போட்படி விட்டிட்டு போகணும். எதுவும் களவு போகாது. ஆனாலும் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.” அப்படின்னு தொடங்கியதை பாதியில விட்டிட்டுஆனாலும் அதொன்னும் பெரிய பிரச்சனை இல்லை.” என்று முடிச்சிட்டாங்க.

விசயம் என்னங்கிறது கொழும்பின் நிலை தெரிஞ்ச எல்லாருக்குமே தெரிஞ்சது தான். ஆனாலும் அனைவருமே காந்தி கற்றுத் தந்த மூன்று குரங்குகளில் ஒன்றாகத் தான் வாழ வேண்டிய நிலையில் வாழ்கிறார்கள். அதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன? மறு கேள்வி கேட்காமல்ஓவியம் பற்றிச் சொன்னதற்கு நன்றிசொல்லிட்டு திரும்பிப் பாக்காம இடத்தை காலி பண்ணினேன்.

எங்கே என் வைரத்தோடு!


இன்னமும் முப்பது நிமிசத்தில லசி வந்திடுவாள். இன்னமும் என் கூந்தல் ஈரமாயே இருக்கு. இதை கைய வைச்சு ரெடியாக லேட்டாயிடும். "என்னை மாதிரி 'பொப் கட்' வெட்டிக்கோ. இல்லன்னா இதோட போராடியே வீணாப் போயிடுவ. ஒரு இடத்துக்கும் டைமுக்கு போக முடியா!" என்று எத்தனையோ தடவ எச்சரித்திருக்கிறாள்.

இண்டைக்கு லேட்டான லசி என்னைத் திட்டி தீர்த்திடுவாள். திட்டினாக் கூட பரவாயில்ல! என்னோட ஸ்பெஷல் ஹோட்டல் டினரும் இல்லாம போயிடும். ஒரு மாதிரியா வேக வேகமாக ரெடியயிட்டன். இனி தோட்டை போடுறது மட்டும்தான் பாக்கி. ஆனா..... லசி ஆசையா வாங்கித் தந்த வைரத் தோட்டை காணல!

ஒரு வேள லசி எடுத்திருப்பளோ? சீ! நிச்சயமா இருக்காது. அவள் பிளாஸ்ரிக், சில்வர் என்று விதவிதமா தன்னோட உடுப்புக்கு மச்சிங்கா போடுவாளே தவிர இந்த மாதிரி நகைகள் பட்டிக்காடு மொடல்ன்ணு அவளுக்கு பிடிக்காது. அப்ப எங்க போயிருக்கும்?

ஐயோ! ஹாலிங் பெல் சத்தம் கேட்குதே! லசி வந்திட்டாள். வீடு முழுதும் அலசியும் அவள் அந்த பழாப் போன தோடு கிடைக்கல. இப்ப என்ன நடக்க போகுதோ! மனசு பட படக்க கதவை மெதுவாக திறக்கிறேன்.

ஹய்யா! என் வைரத் தோடு! என்ன ஆச்சர்யம்? என் ஆசை மனைவி லசி எனும் லட்சுமி காதில மின்னுது! இன்னைக்கு நான் சமைக்க தேவயில்ல!

வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் ‘வால் பூ’




“வாழ்வின் முக்கிய தேவைகளில் வால்பூவா?” இது உடனடியாக எழக் கூடியகேள்வியே. ஆனால் உங்கள் வாழ்வில் ஒரு நாளாவது வால் பூ உங்கள் கையில்இருந்திருக்கும். திருமண விழா, பாடசாலை விழா, மரண நிகழ்வு என்று உங்கள்வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் வால் பூவின் பங்களிப்பு இருந்திருக்கும். நிச்சயமாக இல்லை என்று மறுப்பவர்களுக்கு நான் ஓர் உண்மையைக் கூறவேண்டும். ‘அந்தூரியம்என்று நீங்கள் ஆசையுடன் அழைக்கும் பூவின் ஆங்கிலபெயர்ரெயில் பிளவர்’ (tail flower).

“ஆ…! இது தான் வால் பூவா? என்று வாயைப் பிளக்காதீங்க. அந்தூரியம் என்பதுகிரேக்க மொழிச் சொல். அதன் ஆங்கில பதம் ‘ரெயில் பிளவர்’ என்றால் நம் தூயதமிழில் ‘வால் பூ’ என்பது தானே? இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் வாழ்வின்முக்கிய நிகழ்வுகளில் இதன் பங்களிப்பு இருந்திருக்கிறதல்லவா?

இந்த வால்பூவை நாளாந்த வாழ்வில் கண்டிருப்பினும் இதைப் பற்றி எத்தனைபேருக்கு தெரியும்? இந்த பூ பற்றி சில தகவல்கள்:
இன்று நம் நாட்டில் மிகுந்த விற்பனையை கொண்ட மலர்களில் இதுவும் ஒன்று. இன்று சாதாரணமாக பல வீடுகளை அலங்கரிக்க பயன்படுகிறது. அதிகமானஇடவசதி குறைந்த இடங்களிலும் சூரியஒளியை அதிகம் பெற முடியாதஇடங்களிலும் வைத்துப் பாராமரிக்க கூடியவாறு இருப்பதே அதற்குகாரணமாகும். இம்மலரிற்கு நிழல் அவசியமாக இருப்பதால் அடுக்குமாடி புறாக்கூட்டு வீடுகளிலும் இவ்வால் பூச்செடியை வளர்க்க முடிகிறது. இருப்பினும்பணத்தை தரக் கூடிய தொழில் ரீதியான வளர்ப்புக்கு மத்திய மலைநாடு மற்றும்ஈரவலயங்களே சிறந்த இடமாகவுள்ளது.

இந்தஅந்தூரியம்கன்றுகளாகவும் மலர்களாகவும் உள்ளுர் சந்தைகளில்பெரிதும் காணப்படுகின்றன. ஆனால் இவ்வாறு உள்ளுர் சந்தைகளில் விற்பதன்மூலம் உற்பத்தியாளர்கள் குறைந்தளவு வருமானமே ஈட்ட முடியும். இதனால்அந்தூரியத்தின் ஏற்றுமதியை அதிகரிப்பதில் அரசாங்கம் பெரிதும் கவனம்செலுத்தி வருகிறது. ¼ ஏக்கர் நிலத்தில் அந்தூரியத்தை தொடர்ந்து 5 வருடங்கள்பயிரிட்டு விற்பனை செய்வதன் மூலம் ஏறத்தாழ 3 லட்சம் ரூபா இலாபம் பெறமுடியுமென போராதனை அரச தாவரவியல் பூங்காவின் 5 வருடத்திற்கானமதிப்பீடு தெரிவிக்கின்றது. அந்நிலத்தில் பயிர்ச் செய்கையின் போது வருடம்ஒன்றிற்கு 35,000 பூக்களளவில் அறுவடை செய்ய முடியும் எனவும்கணக்கிடப்பட்டுள்ளது.

பணப்பயிராய் அலங்கரிக்கக் கூடிய அந்தூரியம் பயிர்ச்செய்கை பயனள்ளவகையில் அமைய வேண்டும் எனின் அதற்குரிய போதுமான இடவசதி தேவைஎன்பது இதிலுள்ள பாரிய குறைபாடாய் காணப்படுகிறது. ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகளை வளர்ப்பதே வருமானத்தை தரும் வழி எனவிவசாயத் திணைக்கள செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு செடியிலும் வருடத்துக்கு சராசரியாக 6 மலர்களை பெறலாம் எனவும்இதனால் அதிக இடவசதி உடையவர்களுக்கே பயிடும் ஆலோசனைவழங்கப்படுவதாகவும் அவ்வாறான அதிக மலர் செய்கை இல்லாவிடின்இலாபமீட்ட முடியாது எனவும் அத்தகவல்கள் கூறுகின்றன. இதன்படி 10,000 செடிகளின் மூலம் ஏறத்தாழ 60,000 மலர்களைப் பெற முடியும்

இனி அதன் விற்பனை பற்றி பார்ப்பின்,
இம்மலர்கள் உள்நாட்டில் விற்கப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்யப்படுவது தெரிந்ததே.

பொதுவாக இதய வடிவில் இதழ்களைக் கொண்டுள்ள இம்மலர்கள் சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, பொன்மஞ்சள், பச்சை போன்ற பல நிறங்களில்காணப்படுகிறது. இவற்றின் அளவுகளையும் தரத்தையும் பொறுத்து கேள்விஅமைந்துள்ளது.

இதன்படி பளபளப்பான இதழ்களை உடைய மலர்களுக்கு கேள்வி அதிகமாகஉள்ளது. அத்துடன் இதழும் பூவும் ஓரே நீளமுடைய மலர்ளே பெரிதும்விரும்பப்படுகின்றன.

அவ்வாறான மலர்கள் அழகானவை என வாடிக்கையாளர்கள் கருதுவதால்அவற்றையே பெரிதும் விரும்புகின்றனர் என அந்தூரியம் விற்பனையாளர்கள்கூறுகின்றனர். இம்மலரொன்று உள்ளுர் விற்பனை நிலையங்களில் 5 ரூபாய்முதல் காலத்திற்கேற்ற வகையில் 15 ரூபாய் வரை விற்க முடியும் எனவும்தெரிவிக்கின்றனர்.

பொதுவாக இம்மலர்கள் 4 – 6 கிழமைகள் வரையில் வாடாமல் இருப்பதனால்நீண்டநாள் அலங்கார வேலைகளுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. எனவே நீண்டநாள் அலங்கார வேலைகளுக்கு இவை பெரிதும் விரும்பப்படுகின்றன. அத்துடன்ஏனைய மலர்களிலும் விலை குறைந்தாககவுள்ளது. இவற்றினை ஏற்றுமதிசெய்யும் போது ஒரு பூ 30 – 35 ரூபாய் வரை பெறுமதி உடையதாகிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்கு கொடுக்கும் பூங்கொத்து முதல் திருமண மண்டபஅலங்காரம், ஏனைய பல வைபவ அலங்காரங்கள் எனத் தொடர்ந்து மரணஅஞ்சலிக்கு மலர்வளையம் வரை அத்தனைக்கு பயன்படுகிறது.

என்ன உங்கள் வீட்டில் அடக்கமாய் நிற்கும் பணப்பயிரை வியப்புடன்பார்க்கிறீர்களா? ‘நிறை குடம் தளம்பாதுஎன்பது எத்தனை உண்மை.

மரண வாசலில் ஓர் ஞானம்.


நாளை அந்த வீட்டில் பெரியதொரு விருந்துபச்சாரம் நடக்கப் போகின்றது. இது அவன் தன் நண்பர்களுக்குகொடுக்கப் போகும் 50ஆவது விருந்து. கடந்த நான்குமாதத்திற்குள் 49 நாள் விருந்து வைப்பதென்றால் பெரியவிசயமல்லவா? அதுவும் பொருட்களின் விலையுயர்வால் நாடே வாடிப் போயிருக்கும் காலத்தில்!

அதை நினைக்கும் போது அவனுக்குள் உள்ளுர மகிழ்ச்சியாக இருந்தது. தன்நண்பர்கள் மத்தியில் தன் மதிப்பு உயர்ந்து நிற்பதை நினைக்கையில் ஒருபெருமை. கடந்த அந்த நான்கு மாதங்களில் நண்பர்கள் மத்தியில் ஹீரோவேஅவன்தானே!

நாளைக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்ய வேண்டுமே… வேக வேகமாக வீட்டை விட்டுக் கிளம்பினான். வெளியே கும்மிருட்டு. நேற்றுத்தான் அமாவாசை முடிந்திருந்தது. அந்த இருளை கூட பொருட்படுத்தாமல் தன் இலக்கை நோக்கி வேகமாக நடந்தான். கடைகள்எல்லாம் மூடப்பட்டிருந்தன. நிம்மதிப் பெருமூச்சு ஒன்று அவனிடமிருந்துவெளிவந்தது. சூழ்நிலை அவன் எதிர்பார்த்தது போலவே அமைந்திருந்தமை அவனுக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கடை வீதிகளைக் கடந்து அந்த வீட்டை அடைந்த போது அதுவும் இருளிலேமூழ்கிக் கிடந்தது. சத்தம் செய்யாமல் படலையைத் திறந்து உள்ளேநுழைந்தான்.

அதோ அவன் தேடி வந்த பொக்கிஷம். அந்தக் கூட்டினுள்ளே கோழிகள்எல்லாம் தூக்கத்தில் இருந்தன போலும். சத்தம் எதுவுமில்லை. அவற்றில் நாளைத் தேவைக்கு மூன்றையாவது தூக்கிக் கொண்டு போக வேண்டும்.

மறுபடி ஒரு மின்னல் சந்தோஷம். இது அவனது வெற்றிகரமானவெள்ளிவிழா திருட்டாக அமையப் போகிறது. கோழிக் கூட்டினுள்உற்சாகமாக நுழைந்தான். காலில் ஏதோ பட்டு உச்சி முதல் பாதம் வரை ஷாக் அடித்தது. அது பல நாள் திருடனை பிடிப்பற்காய் வீட்டுக்காரர் வைத்திருந்த மின்சாரக் கம்பியை மிதித்து விட்டதால்

துடி துடித்து இறக்கும் தறுவாயில் அந்த புத்தனுக்கு ஓர் ஞானம் பிறக்கிறது. என்னை ஹீரோவாக்கி 49 தடவை கோழி புரியாணியைச் சுவைத்த வாயால் நாளை காறி உமிழப் போகிறார்கள்கோழித் திருடன்என என் பிணத்தில். மித்திர துரோகிகள்! இதுதான் உலகம்!