புதன், 24 பிப்ரவரி, 2010

பணம் உழைக்க பலே வழிகள் சில......



அமெரிக்க நிதி நெருக்கடியை தீர்க்க ஒபாமா சிந்தித்தது போல, நம்மவர்களின் நிதிப் பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி என ஆழ்ந்து சிந்தித்ததன் பயனாக கிடைத்த அருமையான சில ஆலோசனைகள்....

01 - ஒரு A4 பேப்பரில் 10 பெயர்களை எழுதிக் கொள்ளுங்கள். அவற்றின் எதிரே 500, 700, 1000, 800, 500, 450 என சில பெறுமானங்களை குறித்துக் கொள்ளுங்கள். அந்த தாளின் மேல் பகுதியில் ஒரு பாடசாலையினதோ கோயிலினதோ பெயரை எழுதி அதற்கான கட்டட நிதி அல்லது அன்னதான நிதி என எழுதி அவற்றை file ஒன்றினுள் போட்டுக் கொள்ளுங்கள். இனி வீடு வீடாகச் சென்று அதனைக் காட்டி பணம் வசூலிக்கலாம்.

பல இடங்களில் பணத்துக்கு பதிலாக அவமானங்கள் கிடைக்கலாம். பெரிய இலட்சியத்தை அடையும் பாதையில் இவையெல்லாம் சகஜம் என்பதை உணர்ந்து பெரிய மனதுடன் மறந்து விடுங்கள்.

02- வீட்டு வாசலில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச வகுப்புக்கள் என்று எழுதி அதன் கீழ் சின்ன எழுத்தில் உங்கள் பெயரையும், பெயருக்கு பின்னால் பெரிய எழுத்தில் 2 ஆங்கில எழுத்தையும் எழுதி வையுங்கள் (-
ம் - BA, BSc, Bcom). படிக்க வருபவர்களிடம் registation fees, admission fees, maintaining fees, tute fees, exam fees.... என புதிது புதிதாக கண்டு பிடித்து வாங்கலாம். வகுப்புக்கள் இலவசம்! வருமானம் அதிகம்.

பணத் தேவை ஏற்பாடு போதெல்லாம் exam வைக்கலாம் அல்லது
ரு tuteஎழுதிக் கொடுக்கலாம்.

03 - பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தால் உங்களுக்கு வசதி மிகவும் அதிகம். பாடசாலை நேரத்தில் நன்கு தூங்கி விட்டு, சந்தேகங்களை வீட்டில் வந்து கேட்குமாறு மாணவர்களிடம் சொல்லி டியூஷன் வகுப்பு தொடங்கலாம். உங்களிடம் படிக்க வரும் பிள்ளைகளுக்கு புள்ளிகள் அதிகம் வழங்குதல், பரீட்சை வினாத்தாளில் வரப் போகும் வினாக்களை முதலே அறிவித்தல் போன்ற சின்ன சின்ன சலுகைகளை வழங்குவதன் மூலம் பிரபலமாகி வருமானத்தை பெருக்கலாம்.

04 - கொஞ்சம் மருத்துவம் தெரிந்திருந்தால், சற்று பின்தங்கிய கிராம
ப்புறம் ஒன்றிற்கு சென்று ஒரு கிளினிக் ஆரம்பியுங்கள். தலைவலி என்று வரும் நோயாளிகளிடம் கூட A - Z என்ற 26 எழுத்துக்களில் ஒரு பத்தையோ பதினொன்றையோ சேர்த்து ஒரு சொல்லை உருவாக்கி அந்த நோய் வந்துள்ளதாகச் சொல்லுங்கள். பின் 10 விட்டமின் மாத்திரைகளின் பெயர்களை எழுதிக் கொடுத்து விட்டு fees வாங்கலாம். மருந்துக் கடைக்காரனுக்கு உதவி செய்த புண்ணியம் கிடைக்கும்.

05- பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலையும் மாலையும் கோயில் வாசல்களிலும், மதியம் பள்ளிவாசல் முன்பாகவும், ஞாயிற்றுக்கிழமை காலையில் தேவாலய (சேர்ச்) வாசலிலும் போய் இரு துண்டு துணிகளை விரித்து விட்டு ஒன்றில் படுத்து தூங்குங்கள். பின் கண்விழித்து பார்க்
கும் போது நீங்கள் விரித்த மற்ற துண்டு துணியில் பணம் கொட்டிக் கிடக்கும்.

ஆனால் நீங்கள் தூங்கும் போது அதை யாரும் தூக்கிக் கொண்டு போகாமல் இருக்க கொஞ்சம் அவதானமாக அரைத் தூக்கம் தூங்குவது நல்லது.

06- எங்காவது சென்று கொஞ்சம் மலிவு விலையில் ஒரு தொகை book markerகளையோ அல்லது stickerகளையோ வாங்கிக் கொள்ளுங்கள். அதை எடுத்து கொண்டு கடற்கரை, பூங்கா போன்ற காதலர்கள் செறிந்திருக்கும் இடத்திற்கு சென்று அவற்றை விலையை பல மடங்கு அதிகமாக சொல்லுங்கள். சிவபூஜையில் கரடியான உங்களை விரட்டும் நோக்கிலேயே பலர் நீங்கள் சொல்லும் விலைக்கே வாங்கிக் கொள்வார்கள்.


இங்கு சில வேளை மட்டுமே அவமானங்கள் ஏற்படும். மறந்திடாதீங்க! நமக்கு கொள்கையே முக்கியம். "காகம் திட்டி மாடு சாகாது!" என்று உங்களை நீங்களே ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள்.

07- கொஞ்சம் அழகுக் குறிப்புக்களை படித்து தெரிந்து கொண்ட பின்னர் சில அழகு சாதன உபகரணங்கள், பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு அழகு நிலையம் ஆரம்பிக்கலாம்.

ஒருவருக்கு (பெண்ணென்றால் மட்டும்) தலை
முடி வெட்டுவதற்கே 600, 700 ரூபாயை cutting charge ஆகபெறலாம். ஆனால் முடியை ஒவ்வொன்றாக வெட்டி குறைந்தது 1 மணி நேரத்தையாவது ஒதுக்கி வெட்ட வேண்டும்.

08 - கடைசி வழி, இப்படி எல்லாம் கஷ்டப்படாமல் ஒரே நிமிடத்தில் பணம் ஈட்டக் கூடிய சிறப்பு வழி. ஆனால் இந்த பிரமாஸ்திரம் பெண்களுக்கு பயன்படாது என்பது வருத்ததிற்குரியது. உடனடியாக திருமணம் செய்து கொள்வதே அந்த வழி.

பணம், வீடு, நகை அனைத்தும் கிடைக்கும். அதிலும் உங்கள் தொழில், வாழும் நாடு என்பனவற்றின் அடிப்படையில் இந்த வருமானத்தின் அளவு தங்கியுள்ளது. உதாரணமாக டாக்டர், இஞ்சினியராகவோ கனடா லண்டன் பிரஜையாகவோ இருந்தால் பல லட்சம். ஆசிரியராகவோ இலங்கை பிரஜையாகவோ
இருந்தால் லட்சங்கள் சற்று குறையும்.

என்ன களத்தில் குதிக்க போறீங்களா? ஒரு நிமிடம்..... இந்த ஆலோசனைகள் மூலம் கிடைக்கும் வருமானம் எவற்றிலும்
பங்கு கோரவோ பங்கேற்கவோ மாட்டேன். கிடைப்பது எதுவானாலும் அது உங்களுக்கே.