திங்கள், 8 மார்ச், 2010

மகளிர் தினக் கூட்டம்

“அவளெல்லாம் பொம்பிளையா? புருஷன் செத்து முழுசா ஒரு வருஷம் கூட முடியலை. கைக்குழந்தையை வைச்சுக் கொண்டு இரண்டாம் கலியாணமும் கட்டிட்டாள். இவள் எங்கட தெருவில இருக்கிறதால எங்களுக்குத் தான் அவமானம். அவளைப் போலவே நடத்தை கெட்டவர்கள் என்றுதானே எங்களையும் நினைக்க போறாங்க.” ஆழ்ந்த கவலையுடனும் சமூகப் பொறுப்புடனும் பேசிக் கொண்டிருந்தாள் பார்வதி மாமி.

சற்று முன்னர் பார்வதி மாமி ‘விதவைகள் மறுமணம்’ பற்றி பேசியபோது ஆதரித்து கைதட்டிய நண்பிகள் கூட்டம் இதையும் ஆமோதித்து தலையாட்டினர், மகளிர் தினக் கூட்டத்திற்காக பார்வதி மாமியின் கணவரான பரமசிவம் மாமா ஸ்பெஷலாக தயாரித்த கட்லெட்டை சுவைத்துக் கொண்டு. கையில் கட்லெட் இருந்ததால் கைதட்டி பாராட்ட முடியவில்லை போலும்!!

கருத்துகள் இல்லை: